அஸ்ஸலாமு அழைக்கும்[வரஹ்] எல்லாம் புகழும் இறைவனுக்கே!!!.. டுடே எக்ஸ்பிரஸ் நியூஸ் இணையதளம் வருகைக்கு நன்றி !!!....

திங்கள், ஜூலை 18, 2011

மகன் ஸ்டாலினுடன் கடும் வாக்குவாதம்... அறிவாலயத்திலிருந்து வெளியேறிய கருணாநிதி!

Karunanidhi and Stalin

அறிவாலயத்தில் கருணாநிதி - ஸ்டாலின் இடையே கடும் வாக்குவாதம்... அறிவாலயத்திலிருந்து வெளியேறிய கருணாநிதி!! 

டெல்லி: திமுக தலைவர் கருணாநிதிக்கும் அவரது மகன் மு.க. ஸ்டாலினுக்கும் இடையே சூடான வாக்குவாதம் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது திமுக வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்ததில் இருந்தே திமுகவிற்கு நேரம் சரியில்லாமல் உள்ளது. 2ஜி ஊழல் பூதாகரமாக வெடித்து ராசாவும் கனிமொழியும் திஹார் சிறையில் உள்ளனர். தயாநிதி மாறனும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் கைதாகும் சூழல் உருவாகியுள்ளது. 

சன்டிவி, கலைஞர் டிவி போன்றவையும் சிக்கலில் உள்ளன. இன்னொரு பக்கம் நில அபகரிப்பு வழக்கில் தினமும் ஒரு திமுக நிர்வாகி கைதாகி வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று காலை திமுக தலைமையகத்தில் கட்சித் தலைவர் கருணாநிதிக்கும், அவரது மகன் மு.க. ஸ்டாலினுக்கும் இடையே சூடான வாக்குவாதம் நடந்துள்ளது. இதில் கடுப்பான கருணாநிதி தலைமையகத்தைவிட்டு வெளியேறியதாக செய்தி வெளியாகியுள்ளது,

2ஜி விவகாரம் கையாளப்படும் விதம் குறித்து ஸ்டாலின் அதிருப்தியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எப்பொழுதும் கட்சியினர் புடைசூழச் செல்லும் கருணாநிதி நேற்று ஈசிஆர் ரோட்டில் உள்ள கடற்கரை வீட்டிற்கு தனியாகச் சென்றுள்ளார். அவரது செயலாளர் கே. சண்முகநாதனும், பாதுகாவலர்கள் சிலரும் மட்டுமே அவருடன் சென்றுள்ளனர். 

குடும்ப அரசியலால் தான் சட்டசபை தேர்தலில் திமுக தோல்வியடைந்தது என்று கட்சியினரே அதிருப்தியடைந்துள்ளனர் என்று கூறப்படுகின்றது.

புதன், ஜூலை 13, 2011

செல்போன் , டிவிடி, சிடி உள்ளிட்ட பொருட்களுக்கு வரி 14.5 வீதம் உயர்வு


கடந்த கால ஆட்சியில் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் தமிழக
அரசுக்கு கடன் உள்ளதால் அரசுக்கு வருமானம் வரும் வகையில்

டிவிடிக்கள், சிடி, செல்போன் உ‌ள்‌‌ளி‌ட்ட பொரு‌ட்களு‌க்கு 4 வீதத்திலிருந்த வரி தற்போது 14.5 வீதமாக உயர்த்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி அறிவிக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு பொருந்தும் வகையில் மதிப்புக் கூட்டும் வரி 4 இலிருந்து 5 சதவிகிதமாக மாற்றப்படுவதாகவும் ஏற்கனவே கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் இந்த மதிப்புக்கூட்டு வரி உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயப் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சமையல் எண்ணை ஆண்டு விற்பனை 500 கோடி ரூபாய் என்பதிலிருந்து 5 கோடி ரூபாயாக குறைத்துள்ளதுடன் பீடி, புகையிலைப் பொருட்கள் புகையிலை, மூக்குப்பொடி, சுருட்டு ஆகியற்றுக்கும் 20 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.

எல்.சி.டி.பேனல்ஸ், எல்.இ.டி.பேனல்ஸ், டிவிடிக்கள், சிடி, செல்போன், ஐ-பாடு, ஐ-போன்ஸ் மற்றும் அதன் உதிரிபாகங்கள், மொபைல் போன் போன்றவைகளுக்கு இப்போது 4 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இது 141/2 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. எனவும் அர‌சி‌ன் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வியாழன், ஜூலை 07, 2011

வறுமை ஒழிப்பே லட்சியம்: முதல்வர்


 தொழில் துறையில் நாட்டிலேயே தமிழ்நாட்டை முதல் மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற  எனது கனவை நனவாக்க, அனைத்து தொழில் நிறுவனங்களும் தீவிர பங்காற்ற வேண்டும் என்று தொழிலதிபர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா அழைப்பு விடுத்துள்ளார்.
.
வறுமை ஒழிப்பும், வேலையில்லா திண்டாட்டத்தை போக்குவதும் தனது கனவு என்றும் ஜெயலலிதா கூறினார்.
முந்தைய அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தொழில் கொள்கை காரணமாகவே தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் இன்று  நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய குழு கூட்டத்தை துவக்கி வைத்து பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா கூறியதாவது:

எனது அரசு அமைந்துள்ள 50 நாட்களுக்குள் இந்த கூட்டத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.  தமிழக அரசின் வளர்ச்சி திட்டம் தொழில் துறையில் முக்கிய பங்காற்ற  தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது.
இந்த ஆண்டுக்கான திட்டமாக  இந்திய தொழில் கூட்டமைப்பு வாழ்வாதாரத்துக்காக  தொழில் என்ற கருத்தை தேர்ந்தெடுத்திருப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.

  சாதாரண மனிதனின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே எனது அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது. தொழில் வளர்ச்சியில்  இந்தியா மிகுந்த வாய்ப்பு வசதிகளை கொண்ட நாடாக விளங்குகிறது.  வளர்ச்சி விகிதமும் அதிகரித்திருக்கிறது. எனினும் இன்னமும் நம்நாட்டில் வறுமை, சமச்சீரற்ற வருமானம் ஆகியவை நிலவி வருகின்றன. வறுமை குறித்து நான் மிகுந்த கவலை கொண்டுள்ளேன். வறுமை ஒழிப்பு விஷயத்தில் தமிழ்நாட்டில்  குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.  இந்த விஷயத்தில் வளர்ச்சி அடைந்த மாநிலங்களான மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, கர்நாடகத்தை காட்டிலும் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

வறுமையையும், வேலையில்லா திண்டாட்டத்தையும் அறவே ஒழிப்பதுதான் எனது கனவாக உள்ளது. இந்த லட்சியங்களை எட்டுவதற்கு  அனைவரும் பாடுபட வேண்டும். 2015ம் ஆண்டுக்குள் இந்த லட்சியத்தை எட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.  இந்த கனவை நனவாக்க வளர்ச்சியும், சிறந்த நிர்வாகமும் அவசியமாகும்.

தமிழ்நாடு பாரம்பரியமாகவே தொழில் சார்ந்த மாநிலங்களில் ஒன்றாக  உள்ளது.  பொறியியல், வாகன உதிரி பாகங்கள், ஜவுளி, தோல், சர்க்கரை உள்ளிட்ட உற்பத்தி துறையில் தமிழகம் மிகச்சிறந்த ஆதாரத்தை கொண்டதாக விளங்குகிறது.

பொருளாதார தாராளமயமாக்கலுக்கு முன்பு தொழில் மயமாக்கம்,  மத்திய அரசின் தொழில் உரிமங்களைச் சார்ந்ததாக இருந்தது. 1991 ஆம் ஆண்டு லைசென்ஸ் ராஜ் திட்டம்  ஒழிந்த பிறகு தொழில் வளர்ச்சியில் வேகம் அதிகரித்தது.
Photobucket