அஸ்ஸலாமு அழைக்கும்[வரஹ்] எல்லாம் புகழும் இறைவனுக்கே!!!.. டுடே எக்ஸ்பிரஸ் நியூஸ் இணையதளம் வருகைக்கு நன்றி !!!....

திங்கள், நவம்பர் 14, 2011

ஷூக்களை கழற்றி சென்று ஆய்வு : நியுயார்க் விமான நிலையத்தில், கலாமிடம் 2 முறை சோதனை!

புதுடெல்லி: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிடம், நியுயார்க் விமான நிலையத்தில் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் 2 முறை சோதனை நடத்தி அவமதிப்பு

வெள்ளி, நவம்பர் 11, 2011

ரஜினியைச் சந்தித்தது மத்திய அரசு அதிகாரிகள் குழு!

சென்னை, நவ. 11-
Central Govt officials Meet Rajini for Ad - Tamilnadu News Headlines in Tamil

குழந்தைகளுக்கு சத்துக் குறைபாடு காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரம் தொடர்பாக, நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினியை மத்திய அரசு அதிகாரிகள் சந்தித்துப் பேசினர்.

உறவு மேம்பட இந்தியா - பாகிஸ்தான் உறுதி

அட்டு (மாலத்தீவு), நவ.10: உறவை மேம்படுத்திக்கொள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் உறுதிபூண்டுள்ளன. "சார்க்' மாநாட்டில் நடைபெற்ற பிரதமர் மன்மோகன் சிங் - பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸô கிலானி சந்திப்பின் போது இந்த உறுதி மேற்கொள்ளப்பட்டது.

வியாழன், நவம்பர் 10, 2011

இந்தியா அசத்தல் வெற்றி: வெஸ்ட் இண்டீஸ் ஏமாற்றம்


புதுடில்லி: டில்லி டெஸ்டில் அபாரமாக ஆடிய இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பொறுப்பாக ஆடிய சச்சின், லட்சுமண் அரைசதம் கடந்து அசத்தினர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

புதன், நவம்பர் 09, 2011

இஸ்ரத் ஜஹான் உள்ளிட்ட நால்வரின் என்கவுண்டர்​; சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை!

குஜராத் மாநிலத்தை ஆண்டு கொண்டிருக் கும் மோடி ஆட்சியில் நடைபெற்ற படு கொலைகள் ஒவ்வொன் றாய் வெளிச்சத்துக்கு வந்து கொண்டுள்ளன. குஜராத் மாணவி இஸ் ரத் உட்பட நான்கு பேர் என் கவுண்டரில் கொல் லப்பட்டதை சிறப்புப் புலனாய்வு உறுதி செய் தது.
குஜராத்தில் அகம தாபாத் நகரம் அருகே கோதார்பூர் என்ற இடத் தில் கடந்த 2004இல் ஜூன் 15 ஆம் தேதி மும்பையைச் சேர்ந்த 19 வயது இஸ்ரத் ஜஹான் என்ற மாணவியுடன் ஜாவீத் ஷேக் என்ற பிரனேஷ் பிள்ளை, ஜீசங் ஜோஹர் மற்றும் அம் ஜத் அலி ராணா ஆகியே நால்வர் காவல்துறை என் கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இன்று மாலத்தீவு செ‌ல்‌கிறா‌ர் மன்மோகன் சிங்

சா‌ர்‌க் உ‌‌ச்‌சி மாந‌ா‌ட்டி‌ல் ப‌ங்கே‌ற்பத‌ற்காக ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் இ‌ன்று மலா‌த்‌தீவு செ‌ல்‌கிறா‌ர்.



17வது சார்க் உச்சி மாநாடு நாளை முதல் 2 நாட்கள் மாலத்தீவில் நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்ள பிரதமர் மன்மோகன் சிங் இன்று மாலத்தீவிற்கு புறப்பட்டு செல்கிறார். 

ஜெயலலிதாவிடம் 775 கேள்விகள் பாக்கியுள்ளன– வழக்கறிஞர்


பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கேட்பதற்கு இன்னும் 775 கேள்விகள் பாக்கி உள்ளதாக ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் தெரிவித்துள்ளார்.

டீசல், கேஸ் விலையை உயர்த்தினால் ஆதரவு வாபஸ்: மமதா

புதுதில்லி, நவ.9: டீசல், கேஸ் விலையை உயர்த்தினால் மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெறுவோம் என மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மமதா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திங்கள், நவம்பர் 07, 2011

காற்றழுத்தம் வலுவிழந்தது- மழை குறைந்தது- வெயில் அடிக்க ஆரம்பித்தது

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் படிப்படியாக மழை குறையக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடந்த சில நாட்களாக வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா வங்க கடலில் நிலைக்கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தற்போது சற்று மெலிந்த நிலையில் காணப்படுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் படிப்படியாக மழை குறையக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் கும்மிடிப்பூண்டி, தாமரைப்பாக்கம், விழுப்புரத்தில் அதிகபட்சமாக தலா 9 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. கள்ளகுறிச்சியில் 6 செ.மீ., சென்னை டி.ஜி.பி. அலுவலகம், காஞ்சீபுரம், தேவக்கோட்டை ஆகிய பகுதியில் தலா 5 செ.மீ. மழையும், சென்னை விமானநிலையம், பொன்னேரி, சோழவரம், கடலூர், செய்யார், தர்மபுரி உள்ளிட்ட பகுதியில் தலா 4 செ.மீ. மழையும் பதிவாகியது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தமட்டில், நேற்று முதல் மழை காணப்படவில்லை. ஒரு சில இடங்களில் மட்டுமே லேசான தூறல் மழை காணப்பட்டது.

இருப்பினும் கோவை, நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் நேற்று நல்ல மழை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. 

அதேபோல காவிரி டெல்டாப் பகுதிகளிலும், வைகை பாசனப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை காணப்படுகிறது. இதனால் மேட்டூர் அணை, வைகை அணைக்கு தொடர்ந்து நல்ல நீர்வரத்து காணப்படுகிறது. வைகை அணையில் 2வது வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

முதல் கட்ட மழை முடிவுக்கு வந்துள்ள நிலையில் இந்த ஆண்டு வட கிழக்குப் பருவமழையில் இதுவரை இயல்பை விட கூடுதலாகவே மழை கிடைத்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம், முதல் கட்ட மழையிலேயே தமிழகத்தின் கிட்டத்தட்ட அத்தனை சாலைகளுமே சேதமடைந்து மக்களை பெரும் சிரமத்திற்குள்ளாக்கியுள்ளன. அடுத்த மழை வருவதற்குள் சேதமடைந்த சாலைகளை ஓரளவேனும் சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Photobucket