அஸ்ஸலாமு அழைக்கும்[வரஹ்] எல்லாம் புகழும் இறைவனுக்கே!!!.. டுடே எக்ஸ்பிரஸ் நியூஸ் இணையதளம் வருகைக்கு நன்றி !!!....

சனி, ஏப்ரல் 30, 2011

பனீர் வெஜிடபிள் பிரியாணி

Paneer Veg Biryani - Cooking Recipes in Tamil
பன்னீரில் உள்ள புரதச்சத்து அனைத்து வயதினருக்கும் மிகவும் நல்லது. சுவையுள்ளதும் கூட. பன்னீரை விதவிதமாய் சமைத்து சாப்பிட்டிருப்போம்.. ஆனா, பிரியாணி செய்து சாப்பிட்டிருக்கீங்களா? செஞ்சு பாருங்க..சூப்பரா இருக்கும்! சுவையும் மணமும் நிறைந்துள்ளதால் சைவ விருந்தாளிகளுக்கும் மிகவும் ஸ்பெஷலான ஒரு டிஷ் செய்து கொடுத்த சந்தோஷம் நிலவும்...

தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 1 கப்
கெட்டித் தயிர் - 1 கப்
நெய் - 6 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்
பிரிஞ்சி இலை - 4
பனீர் - 100 கிராம்
உப்பு - 11/2 டீ ஸ்பூன்
வெங்காயம் - 2
இஞ்சி விழுது - 1/2 டீ ஸ்பூன்
பூண்டு - 4 பற்கள்
தக்காளி - 2
பீன்ஸ் - 8
கேரட் - 1
காலிபிளவர் - 8 சிறிய பூக்கள்
நூல்கோல் - 1
வறுத்து அரைக்க:
கிராம்பு - 2
பட்டை - 1 சிறிய துண்டு
சோம்பு - 1 டீ ஸ்பூன்
சீரகம் - 1 டீ ஸ்பூன்
தேங்காயத் துருவல் - 6 டேபிள் ஸ்பூன்
கசகசா - 1 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 4
பச்சை மிளகாய் - 2
செய்முறை:
* பாசுமதி அரிசியைக் களைந்து 1 கப் தண்­ணீரில் ஊற வைக்கவும்.
* சிறிது நெய்யில் அரைக்க கொடுக்கப்பட்டிருக்கும் பொருட்கள் (தேங்காய்த்துருவல் நீங்கலாக) வறுத்து அதனுடன் தேங்காய் துருவல், சிறிது தண்ணீ­ர் சேர்த்து மிக்சியில் போட்டு மசிய அரைத்துக் கொள்ளவும்.
* ஒரு குக்கரில் மீதியுள்ள நெய் ஊற்றி பொடியாக அரிந்த வெங்காயம், தக்காளி, இஞ்சி, விழுது, பூண்டு, பிரிஞ்சி ஆகியவை அரைத்த விழுதுடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
* வதக்கிய கலவை நன்கு நெய்யை விட்டுப் பிரிந்தவுடன் பொடியாக நறுக்கிய காய்கள், காலிபிளவர் பூக்கள், சிறு துண்டுகளாக நறுக்கிய பனீர் சேர்த்து சிறிது வதக்கவும்.
* தண்­ணீருடன் ஊறிய பாசுமதி அரிசி, தயிர், உப்பு சேர்த்து நன்கு கலந்து குக்கரை மூடி 2 விசில் விட்டு சிம்மில் 5 நிமிடம் வைத்து அணைக்கவும்.
குறிப்பு: பச்சைப் பட்டாணி, குடமிளகாய் போன்ற காய்களையும் கூடுதலாக சேர்த்து பிரியாணியின் ஆரோக்கிய சுவையைக் கூட்டலாம். நெய்க்கு பதிலாக எண்ணையும் உபயோகிக்கலாம்.



வாழைப்பழ முந்திரி ஐஸ்கிரீம்


Banana-Cashew Ice Cream - Cooking Recipes in Tamil
கோடை ஆரம்பிச்சாச்சு... இனி என்ன வீட்டிலேயே குளு குளு ஐஸ் க்ரீமா செஞ்சு சூப்பரா சாப்பிடலாமே.....
தேவையான பொருட்கள்:
முந்திரிப் பருப்புகள் - 1/4 கிலோ
ஆப்பிள் சாறு - 1 கப்
பழுத்த வாழைப்பழங்கள் (பச்சைநாடன் போலப் பெரியது) - 3
பால் - 1 கப்
தேன் - 3 டேபிள் ஸ்பூன்
வெண்ணிலா எஸ்ஸென்ஸ் - 1 டீ ஸ்பூன்
செய்முறை:
* முந்திரிகளை மிக்ஸியில் போட்டு மாவாக அரைத்துக்கொண்டு அதனுடன் ஆப்பிள் சாறு ஊற்றி, கலவை மாவாக, நுண்ணியதாக அரைபடும் வரை அரைக்கவும்.
* இத்துடன் வாழைப்பழம், பால், தேன் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் போட்டு மென்மையானதாக அரைத்துக்கொள்ளவும்.
* இதனை ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் போட்டு ஃப்ரீசரில் உறைய விடவும்.
* இரவு முழுவது உறைந்த பின்னர், ஐஸ்கிரீம் கோப்பைகளில் போட்டு பறிமாறலாம். வெய்யிலுக்கு சாப்பிட இனிது.

மாம்பழ பர்பி

Mango Burfi - Cooking Recipes in Tamil

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் முக்கனியின் முதல் கனி மாம்பழம். பார்த்த உடன் சாப்பிடத் தூண்டும் மாம்பழ சீசன் ஆரம்பிச்சாச்சு... இனி என்ன சுவையான மாம்பழ ரெசிபியா சமைச்சு அசத்துங்க...!
தேவையான பொருட்கள்:
மாம்பழச் சாறு - 1 கப்
பால் பவுடர் - 1/2 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் துறுவல் - 1 கப்
ஏலக்காய்த் தூள் - 1 ஸ்பூன்
செய்முறை:
* அடிக்கனமான பாத்திரத்தில் நெய்விட்டு மாம்பழக் கூழைப் போட்டுக் கிளற வேண்டும்.
* கூழ் கெட்டியானதும் இறக்கிவைத்து அதில் தேங்காய்த் துருவல், சர்க்கரை, பால் பவுடர் எல்லாம் சேர்த்துக் கிளறி மீண்டும் அடுப்பில் வைத்து மிதமான தீயில் நன்றாகக் கிளற வேண்டும்.
* மீதியுள்ள நெய்யை விட வேண்டும்.
* பாத்திரத்தில் ஒட்டாமல் பொங்கி வரும்போது ஏலக்காய்த் தூளைப் போட்டு ஏற்கனவே நெய் தடவிய தட்டில் கொட்ட வேண்டும்.
* லேசாக ஆறியதும் துண்டுகள் போட வேண்டும்.

திங்கள், ஏப்ரல் 25, 2011

புவி வெப்பம் அதிகரிப்பது ஏன்?

Green house effect
குளிர் நாடுகளில் தாவரங்களுக்கு அதிகமான வெப்பம் தேவைப்படுவதால் கண்ணாடி வீட்டிற்குள் (green house) செடிகளை வளர்க்கிறார்கள். கண்ணாடி வெப்பத்தை எளிதில் கடத்துவது இல்லை. கண்ணாடி வீட்டிற்குள் புகுந்த வெப்பம் வெளியேற வழியில்லாமல் அங்கேயே தங்கிவிடுகிறது. இதனால் கண்ணாடி வீட்டிற்குள் எப்போதும் வெப்பம் அதிகமாகவே இருக்கும்.

நாம் வாழும் பூமியைச் சுற்றிலும் இருக்கும் காற்று மண்டலம்தான் சுவாசிப்பதற்கு ஆக்சிஜனை வைத்திருக்கிறது. பூமி அதிகமாக சூடாகிவிடாமலும், அதிகமாக குளிர்ச்சியடைந்து விடாமலும் சம நிலையை இந்த காற்று மண்டலம்தான் ஏற்படுத்துகிறது. நம்முடைய உடலுக்கு சட்டை எப்படியோ அதைப்போல பூமிக்கு காற்று மண்டலம்தான் சட்டையாக இருக்கிறது. காற்று மண்டலத்தில் ஆக்சிஜனுடன், கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு, மீத்தேன் ஆகிய வாயுக்களும் இருக்கின்றன. இந்த வாயுக்கள் கண்ணாடியைப்போல செயல்படுவதால் பசுமைக்குடில் வாயுக்கள் (greenhouse gases) என்று பெயர் வைத்திருக்கிறோம்.

சூரியனிடமிருந்து பூமிக்கு வரும் வெப்பத்தை மண், நீர், உயிரிகள் இவையெல்லாம் உறிஞ்சிக் கொள்கின்றன. உறிஞ்சிக்கொண்டவை போக மீதமுள்ள வெப்பம் பசுமைக்குடில் வாயுக்களால் வான்வெளிக்கே திருப்பிவிடப்படுகிறது. வான்வெளியில் கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு ஆகிய வாயுக்களின் அளவு அதிகரிக்கும்போது, பூமிப்பரப்பை நோக்கி திருப்பப்படும் வெப்பத்தின் அளவு அதிகரிக்கிறது. இதனால் பூமி இயல்பைவிட அதிகமாக வெப்பமடைகிறது. புவிவெப்பமடைவது இன்றைய உலகத்தின் தலையாய பிரச்சினையாகிப் போனது இப்படித்தான். இதைத் தவிர்க்க வேண்டுமானால், காற்று மண்டலத்திற்குள் தொழிற்சாலைப் புகை, வாகனக் புகை மூலம் மனிதகுலம் துப்பும் பசுமைக்குடில் வாயுக்களை குறைக்க வேண்டும்.

2019ம் ஆண்டு பூமியை விண்கல் தாக்குமா?

Moon

2002 என்.டி.7 (2002 N.T.7) என்ற விண்கல் ஒன்று விநாடிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இது 2019வது ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தேதி பூமியைத் தாக்கும் என்று விஞ்ஞானிகள் நாள் குறித்தனர். ‘இந்த விண்கல்லின் அகலம் 3 கிலோமீட்டர். இது பூமியின் மீது மோதினால் 77 லட்சம் அணுகுண்டுகள் வெடித்தது போன்ற பேரழிவு ஏற்படும், பூமியில் ஐந்தில் ஒரு பகுதி அழிந்துவிடும், கடல்பகுதியில் மூன்றில் ஒரு பகுதி வற்றிவிடும், தொடர்ந்து 16 மணிநேரம் வானம் இருட்டாக இருக்கும், 12 கோடி பேர் இறந்து போவார்கள், ஓசோன் படலத்தில் பெரிய ஓட்டை விழுந்து பகலில் அதிக வெப்பமும், இரவில் அதிக குளிரும் இருக்கும்’ என்று ஆல்ஸ்டர் அப்ஸர்வேஷன் துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

ஆனால் பின்னர் வெளியான ஆராய்ச்சி முடிவுகள் இந்த விண்கல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் என்றும் அப்படியே பூமியின் பாதையில் வந்தாலும் அதைத் தாக்கி அழிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளன. விண்கற்கள் பூமியின் பாதையில் வருவதும், பின்பு அவை விலகிச் செல்வதும் விண்வெளி வரலாற்றில் அவ்வவப்போது நடைபெறும் நிகழ்வுகளே. எனவே பயம் கொள்ளத் தேவையில்லை.

சந்திரனில் காற்று இல்லாதது ஏன்?

Moon

பூமியின் புவியீர்ப்பு விசையைக் காட்டிலும் சந்திரனின் ஈர்ப்புவிசை ஆறுமடங்கு குறைவு. பூமியில் ஈர்ப்பு விசை இருப்பதால்தான் அந்த விசை காற்று மண்டலத்தை இழுத்துப் பிடித்து வைத்து இருக்கிறது. அத்தகைய விசை சந்திரனுக்கு இல்லாததால் அங்கே காற்று இல்லை. சந்திரனோடு ஒப்பிடும்போது செவ்வாயின் ஈர்ப்புவிசை கொஞ்சம் பரவாயில்லை. பூமியின் ஈர்ப்பு விசையின் பாதியளவு உள்ளது. இதன் காரணமாக அங்கே கொஞ்சம் காற்று உள்ளது. எனவேதான் அங்கு உயிர்கள் வாய்ப்பிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். வியாழன் கிரகத்தின் ஈர்ப்பு விசை பூமியைக் காட்டிலும் 350 மடங்கு அதிகம். இந்த ஈர்ப்பு விசைக்கு உட்பட்டு நாள்தோறும் விண்கற்கள் வியாழனில் விழுந்து கொண்டேயிருக்கின்றன. வால் நட்சத்திரங்களும் அடிக்கடி வந்து மோதுவது உண்டு. இந்த அபாயகரமான ஈர்ப்பு விசையால் வியாழனில் மனிதன் உயிர் வாழ இயலாது.

ஞாயிறு, ஏப்ரல் 24, 2011

சீடியில் உள்ள கோப்புகளை கொப்பி செய்யாதீர்கள்

நாம் பொதுவாக டிவிடி படங்களை நம்முடைய கணணியில் உள்ள டிவிடி டிரைவ்களில் போட்டு பார்ப்பது பழக்கம்.
நாம் நண்பர்களிடம் இருந்தோ அல்லது வேறுயாரிடமாவது இருந்தோ படங்களை வாங்கி உடனே பார்த்து விட்டு தருவதற்கு முடியவில்லை என்றால் நாம் படங்களை கொப்பி செய்து அதனை நம் கணணியில் சேமிப்போம். அவ்வாறு சேமித்த படங்களை டிவிடி டிரைவில் போட்டு பார்ப்பது போன்றே சௌகரியமாக பார்ப்பது என்பது இயலாது.
ஒவ்வொரு கோப்பையும் நாம் வீடியோ ப்ளேயரில் திறக்க வேண்டும். அதில் பலவிதமான கோப்புகள் இருக்கும். நாம் ஒவ்வொன்றாக திறந்து நாம் பார்க்க வேண்டிய அந்த படத்தை பார்ப்பதற்குள் நேரம் ஆகிவிடும். சில கோப்புகள் ஒழுங்காக கொப்பி ஆகியிருக்காது.
எனவே நாம் டிவிடிக்களை கொப்பி செய்வதற்கு பதிலாக அதனை டிவிடி இமேஜ்(DVD IMAGE)ஆக உருவாக்கி கொள்ளலாம். இமேஜ் என்பது சீடி/டிவிடிகளின் நகல் ஆகும். இவை பொதுவாக iso, nrg போன்ற போர்மட்டுகளில் இருக்கும்.
படங்களை மட்டும் இன்றி game ,data, os போன்ற டிவிடிக்களை கொப்பி செய்யாமல் இமேஜ் ஆக கொப்பி செய்வதே சிறந்தது. ஓ.எஸ் போன்றவை பூட்டபுள் சீடி/டிவிடியாக இருக்கும். அதனை சாதரணமாக கொப்பி செய்து மற்றொரு சீடி/டிவிடியில் பதிவு செய்தால்(burn) அவை பூட்டாகாது.
எனவே நீங்கள் எந்த ஒரு சீடி/டிவிடியை கொப்பி செய்வதாக இருந்தால் அதனை இமேஜ் ஆக கொப்பி செய்யுங்கள். அதனை நாம் சீடி/டிவிடியில் எரிக்க வேண்டும் என்றால் ஒரே கிளிக்கிள் எந்த ஒரு தகவல் இழப்பும் இல்லாமல் எரிக்க முடியும். இது போன்ற தகவல்களை சீடி/டிவிடி இமேஜ்களாக தயாரிக்க பல மென்பொருட்கள் உள்ளன.
நாம் அனைவரும் பொதுவாக பயன்படுத்தும் nero போன்ற மென்பொருட்களை கொண்டு நாம் சீடி/டிவிடிகளிலிருந்து இமேஜ்களை உருவாக்கலாம். ஆனால் நாம் பார்க்கப்போவது ஒரு இலவசமான எளிய மென்பொருள்.
இதனை கொண்டு சீடி/டிவிடி இமேஜ்களை உருவாக்கிக் கொள்ளலாம். அதனை பிறகு சீடி/டிவிடிகளில் எரித்துக் கொள்ளலாம் மற்றும் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். இதன் பெயர் image burn ஆகும்.
உங்கள் டிவிடியை டிரைவில் போட்டு விட்டு Create image file from disc என்பதை கிளிக் செய்யுங்கள். பிறகு எங்கு சேமிக்க வேண்டும் என்பதை தேர்ந்தெடுங்கள். அவ்வளவு தான் விரைவாக உங்கள் டிவிடியின் நகல் உருவாகி விடும்.

தாவர எண்ணெய் மூலம் ஓடும் மிக நீளப் பேருந்து

பிரேசிலில் தாவர எண்ணெய் மூலம் ஓடும் உலகின் மிக நீளமான பேருந்து தனது பயணத்தை தொடங்கியது.
பிரேசிலில் பிரபல நிறுவனம் பி.ஆர்.டி என்ற உலகின் நீளமான பேருந்து ஒன்றை தயாரித்துள்ளது. 28 மீற்றர் நீளமுள்ள அந்த பேருந்தில் 250 பேர் பயணிக்கலாம்.
இயற்கை எரிபொருளான தாவர எண்ணெயில் இயங்குகிறது என்பது தான் அதன் தனிச் சிறப்பு. தற்போது இந்த பேருந்தின் சேவை குருடிபா நகரில் தொடங்கப்பட்டு உள்ளது.
நாள் ஒன்றுக்கு சராசரியாக 25,000 பயணிகள் 10 கிலோ மீற்றர் தொலைவுக்கு பயணம் செய்யும் வகையில் மொத்தம் 24 பேருந்துகளை இந்நிறுவனம் இயக்க உள்ளது.
மேலும் மணிக்கு 28 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லும் வகையில் இந்த பேருந்துகள் தயாரிக்கப்படுவதாக அதன் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

சனி, ஏப்ரல் 23, 2011

2 நாளில் 29 கர்ப்பிணிகளுக்கு சிசேரியன்: கேரளாவில் பெரும் சர்ச்சை


விடுமுறையில் செல்வதற்காக 2 நாளில் 29 கர்ப்பிணிகளுக்கு பிரவச திகதிகளுக்கு முன்பாகவே டாக்டர்கள் சிசேரியன் செய்த சம்பவம் கேரளாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கேரளாவில் ஆழப்புழா மாவட்டம் சேர்த்தலாவில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு மகளிர் பிரிவில் 5 பெண் டாக்டர்கள் பணியாற்றுகின்றனர். இந்த மருத்துவமனைக்கு அந்த பகுதியைச் சேர்ந்த மீனவ குடும்பத்தினர் அதிகளவில் வருகின்றனர். இங்கு பிரவச அறுவை சிகி்ச்சை வசதியும் உள்ளது.
இந்த மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிகளில் 30 பேருக்கு வரும் 24 ம் திகதி வரை பிரவச திகதி குறிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த செவ்வாய், புதன் கிழமைகளில் 29 கர்ப்பிணிகளுக்கு அவசர அவசரமாக சிசேரியன் அறுவை சிகிச்சை செய்து குழந்தை வெளியில் எடுக்கப்பட்டது. இதனால் மருத்துவமனையில் போதிய இட வசதி இல்லாமல் அறுவை சிகி்ச்சை செய்யப்பட்ட பெண்களும், குழந்தைகளும் தரையில் படுக்க வைக்கப்பட்டது பற்றி அவர்களின் உறவினர்கள் மருத்துவ கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தனர்.
விசாரணையில் அதிர்ச்சி தகவல் கிடைத்தது. நேற்று புனித வெள்ளி என்பதால் அரசு விடுமுறை. அத்துடன் சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை. வியாழக்கிழமை ஒருநாள் விடுமுறை எடுத்தால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும். இதனால் டாக்டர்கள் விடுமுறையில் செல்வதற்காக 2 நாளில் அவசர அவசரமாக பிரவச திகதிக்கு முன்பாகவே கர்ப்பிணிகளுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
பின்னர் 5 டாக்டர்களில் 4 பேர் 21 ம் திகதி முதல் 4 நாட்களுக்கு விடுமுறையில் சென்று விட்டனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உடனடியாக விசாரணை நடத்த சுகாதார துறை இயக்குனருக்கு அமைச்சர் ஸ்ரீமதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வடிவேலு, சிங்கமுத்து வசூல் நிலவரம்


செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்பார்கள் கிராமபுறங்களில். எச்சில் கையால் காக்காய் கூட ஓட்டாத வடிவேலு, தன்னையறியாமல் மேற்படி பழமொழிக்கு உயிரூட்டியிருக்கிறார்.
பகையாக இருந்தாலும் இவரால் பணமழை பொழிந்திருக்கிறது ஒருவருக்கு அந்த அதிர்ஷ்டசாலி சிங்கமுத்துவேதான்.
இந்த தேர்தலில் சிங்கத்தின் வசூல் எவ்வளவு என்கிறீர்கள்? அது அரை கோடி இருக்கும் என்கிறார்கள் கட்சிக்காரர்கள் அம்மா மட்டுமே முப்பது கொடுத்தாராம்.
உள்ளூர் வசூல் இருபது இருக்கும் என்று மனக்கணக்கு போடுகிறது அரசியல் வட்டாரம்.
அடிகொடுத்த கட்டபுள்ளைக்கே இவ்வளவு சேதம்னா அடிவாங்குன எதிர்கட்சியினருக்கு என்று ஆச்சர்யம் காட்டலாம், தப்பில்லை.
வடிவேலுவுக்கு தலைமை கொடுத்ததே பல பெட்டிகள் என்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் எங்க இடத்தில் கொஞ்ச அதிக நேரம் பிரச்சாரம் செய்தால் இத்தனை கோடி கூடுதலா தர்றேன் என்றார்களாம் சில வேட்பாளர்கள்.
மந்திரி வட்டாரத்தில் இன்னும் சலூகை கூடுதலாம். இப்படி நாடு முழுக்க சுற்றி பேசினாலும், வசூல் என்னவோ இன்னொரு பசுமை புரட்சி என்கிறார்கள் அதே கட்சிக்காரர்கள்.
சிங்கமுத்துவின் வசூல் எல் கணக்கு என்றால் வடிவேலுவின் வசூல் கணக்காம் மக்களின் மனக்கணக்கு என்ன என்பதுதான் இன்னும் புரியவே இல்லை யாருக்கும்.

இயற்கை வேளாண்மை - தேனீக்கள் வளர்ப்போம்


மண்புழுக்களும் மண்ணுக்குள் வாழும் பல கோடி நுண்ணுயிர்களும் மண்ணை வளப்படுத்துவதற்கு உதவுகின்றன என்பது புதிய செய்தியன்று. தரைக்கு மேலும் வானிலைக்கேற்ப பறவைகளும் தேனீக்களும் மலர்களிலிருந்து மகரந்தம் சேமித்தும் பகிர்ந்தளித்தும் மண்ணை வளப்படுத்த பெரும்பங்கு செய்கின்றன.
உழவர்கள் தமது காய்கனி பயிர் சாகுபடிக்கு மகரந்தச் சேர்க்கையின் இன்றியமையாத் தன்மையை நன்கு உணர்ந்திருப்பர். காய்கனி பயிர் வளர்ப்பு அதன் மலர்களிலுள்ள படியெடுத்தலைப் பெரிதும் சார்ந்துள்ளது. எனவே இயற்கை வேளாண்மை என்பது  தேனீக்கள் இன்றி அமையாது என்கிறார் தேனீக்கள் வளர்த்து வரும் சாமிநாதன் என்பவர்.  சிறு வயது முதலே இவர் தேனீக்கள் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்; இந்திய வகை, இத்தாலிய வகை ஆகிய தேனீக்களை வெவ்வேறு தேன்கூட்டுப் பெட்டகங்களில் வைத்து வளர்க்கிறார். குறிப்பாக தேன்கூட்டுப் பெட்டகங்களை நாட்டின் வெவ்வேறு இடங்களிலிருந்து பெற்றிருக்கிறார்.  கட்டுப்படியின்மையால் பல தச்சர்கள் தேன்கூட்டுப் பெட்டகங்களைச் செய்துதர மறுத்தனர்.
அரசு வழங்கும் பெட்டகங்களும் ஒரு மழைக்காலத்தைக் கூடத் தாங்குவதில்லை. இதனால், நல்ல தரமான தேன்கூடு பெட்டகங்கள் கிடைப்பதற்குத் தொல்லைகள் நேர்ந்தன. தேனீ வளர்ப்பிலுள்ள  வேறு சிலருக்கும் இதே தொல்லைகள் இருந்திருக்கலாம். ஆனால், இவர் இதற்கு மாற்றாகச் சமையலறையில் பயன்படுத்தப்படும் கடப்பா பலகைகளை வைத்து தேன்கூடு அமைக்கத் தொடங்கினார். அவை கனமாக இருப்பதால் ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்கு மாற்றக் கடினமாக இருக்கும். ஆனால் நெடுநாள் நீடித்திருக்கும்.
வணிக அடிப்படையில் பெருநகரங்களில் தேனீ வளர்ப்பு நடைமுறைக்கு ஒத்துவருமா?
ஊர்ப்புறங்களில் பயிர்களுக்கு அடிப்பது போல நகரங்களில் வளர்ந்துள்ள சில மரங்களில் பூச்சிக் கொல்லிகளோ வேதிப்பொருட்களோ அடிக்கப்படுவதில்லை. எனினும், இங்கு சுற்றுச்சூழல் மாசு மிகுந்திருக்கும். ஆனாலும் அவை பூச்சிக்கொல்லிகளைப் போலத் தேனீக்களுக்குப் பெரிதும் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை.
உணவுத்தட்டுப்பாட்டைத் தீர்க்கும் தேனீக்கள்:
-    தனிப்பட்ட முறையில் பணம் பார்ப்பதற்காகத் தேனீக்களை வளர்ப்பதில்லை. அவற்றைப் படித்து அறிந்து கொள்வதற்காகவே வளர்க்கப்படுகிறது.
-    தேனீக்கள் மட்டுமல்லாமல் மற்றைய பூச்சிகளும் வளர்வதற்கு நகரங்களில் ஏற்ற சூழல் உள்ளதாக சாமிநாதன் கூறுகிறார். பொதுவாக மக்கள் தேனீக்களின் கொட்டுக்கு அஞ்சுகின்றனர். ஆனால், சில ஆண்டுகளில் அவை நம்முடன் நன்றாகப் பழகிச் செல்லமாகிவிடும் என்று தமது அநுபவங்களைச் சொல்லி வியக்க வைக்கிறார்.
-    அவை நம் கைகளின் மீது மென்மையாக ஊர்ந்து செல்லும். எப்போதாவது தான் கொட்டும்.
-    நம் நாட்டில் பலர் தேனீக்களைத் தேன் சொரியும் பூச்சிகளாகத் தான் பார்க்கின்றனர். ஆனால், அவை இல்லாவிட்டால் உணவுத் தட்டுப்பாடு வருங்காலத்தில் மேலும் கடுமையாவது உறுதி என்றும் அச்சுறுத்துகிறார்.
-    மனிதர்களோடு வயல் விலங்குகளும் இதனால் பாதிக்கப்படும். ஏனெனில், அந்த விலங்குகள் மேயும் மசால்புற்கள் வளர்வதற்குத் தேனீக்கள் மகரந்தம் சேர்க்கின்றன.
தர வரிசை:
-    காய்கனி சாகுபடியில் சீனாவிற்குப் பின் இந்தியா உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. தேனீக்களைப் போன்ற மகரந்த சேர்ப்பிகளின் செழிப்புக்கும் காய்கனி விளைச்சலுக்கும் தொடர்பு உள்ளது. தேனீக்கள் அரிதாகும்போது காய்கனி விளைச்சலும் குறைந்து போகும் என்று கூறுகிறார்.
-    ஐ.நா வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு அறிக்கையின் படி 140க்கும் மேற்பட்ட நாடுகளில் 90 விழுக்காடு உணவு வழங்கும் 100 பயிர்வகைகளில் 71 பயிர்கள் மகரந்தச் சேர்க்கையினால் செழிப்பவை என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
-    தேனீக்கள் காலை கூட்டிலிருந்து கிளம்பி சராசரி 3 முதல் 5 கி.மீ வரை பயணிக்கும். மலர்களிலிருந்து மகரந்தம்  எடுத்து சேமித்துக்கொண்டு அதன் கூட்டில் தமக்கு உணவு சமைக்கும்.
தேனீக்களின் கழிவுகள்:
செரித்து மீந்த மகரந்த உணவைத் தேனீக்கள் கழிக்க வேண்டும். தேனீக்களின் கழிவு என்பது வெளிர் மஞ்சள் நிறத்தில் நீர்த்துளியைப் போன்ற நீர்மம். இவை தேனீச்சாணம் என்று அழைக்கப்படுகிறது.
தேனீக்கள் தமது கூட்டிலிருந்து 10 – 30 மீட்டர் தொலைவு கொண்ட இடத்தைக் கழிப்பிடமாகக் கொள்ளும். சராசரியாக ஒரு தேன்கூடு ஆண்டுக்கு 45 – 50 கிலோ சாணம் கழிக்கும். மழை பொழியும்போது இந்தச் சாணம் மண்ணோடு குழைந்து அருமையான இயற்கை உரமாகிவிடுகிறது.  இதனால், இயற்கை வேளாண்மை செய்யும் உழவர்கள் தேனீக்கள் வளர்ப்பதன் வாயிலாகத் தேனீக்கழிவு இயற்கை உரம் கொண்டு கூடுதல் விளைச்சல் காணலாம்.
உழுவார் தாம் கொல்லைகளில் 3 – 4 கூடுகளில் தேனீக்கள் வளர்த்து அவை தரும் பயன்பாடுகளைப் பெற்று பயனடைய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார்.
இவர் தேனீக்கள் வளர்ப்பிற்கு கூடுகளை வாடகைக்கு அளிக்கிறார்.
மேலும் விவரங்களுக்கு: swaminathan9@gmail.com செல்பேசி: 9487887800
ஆங்கில மூலம்:  http://www.thehindu.com/sci-tech/article1564787.ece

உங்கள் கணணியின் வேகத்தை அதிகரிக்க


கணணியை தொடர்ந்து உபயோகிப்பதால் அதன் வேகம் குறைந்து விடும். மேலும் இணையத்தில் உலா வருகையில் எண்ணற்ற கோப்புகளை கணணியில் சேமிப்போம்.
அவ்வாறு செய்கையில் Melware, Spyware போன்ற வைரஸ்கள் தோன்ற வாய்ப்பு அதிகம் உள்ளது. பின்வரும் வழிமுறைகளை கடைபிடித்தால் உங்கள் கணணியின் வேகம் எப்போதும் போலவே சிறப்பாகவே இருக்கும்.
Clean Your Windows Registry: விண்டோஸ் Registryகளை சுத்தம் செய்ய வேண்டும்.
Removing Unneeded Files: தேவையில்லாத கோப்புகளை அழித்துவிட வேண்டும்.
Removing Unneeded Programs: தேவையில்லாத ப்ரோக்ராம்ஸ் களை அழித்துவிட வேண்டும்.
Empty the Recyle Bin:  மறுபயன்பாட்டு பெட்டியில் உள்ள கோப்புகளை அழித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
Perform a Disk Defragmentation: உங்கள் கணணியில் உள்ள காலியிடங்களை ஒருங்கிணைக்கும் பணியை இது செய்கிறது. மாதம் இரு முறை இப்பணியை செய்ய வேண்டும்.
Update Your Anti Virus: உங்களுடைய Anti virus Softwareவை இணையத்தில் இணைத்து புதுப்பித்து கொள்ள வேண்டும்.
இந்த வழிமுறைகளை செய்து வந்தால் உங்கள் கணணியின் வேகம் அதிகரிக்கும்.

வெள்ளி, ஏப்ரல் 22, 2011

சிறுவயதில் பல மணி நேரம் இசைப்பயிற்சி எடுப்பது குழந்தைகளுக்கு மிகுந்த சிரமத்தை தரலாம்.


ஆனால் இந்த இசைப்பயிற்சியை பெறும் குழந்தைகள் வயதான காலத்தில் மிகச் சிறந்த அறிவாளிகளாக திகழ்கிறார்கள் என ஒரு புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இளவயதில் பியானோ, புல்லாங்குழல் போன்ற இசைக்கருவிகளை பயிற்சி பெறும் நபர்கள் வயதான தருணத்தில் மிகவும் புத்திக்கூர்மையுடன் இருப்பதாக அமெரிக்க உளவியல் சங்க இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கனாஸ் பல்கலைகழக ஆராய்ச்சியாளர் பிரண்டா ஹென்னா பிளாடி கூறுகையில்,"இளவயதில் மேற்கொள்ளும் இசைப்பயிற்சி வயதான காலத்தில் மூளை நரம்புகளில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள உதவுகிறது. சிறுவயது இசைப்பயிற்சி மூளையை துடிப்புடன் வைத்திருக்கிறது. இதனால் மற்றவர்களை விட இசைப்பயிற்சி பெற்றவர்கள் அறிவு நுணுக்கத்துடன் செயல்படுவதை காண முடிகிறது" என்றார்.
இசை மனதுக்கு இதம் அளித்து பதட்டத்தை குறைக்க உதவுகிறது. ஆழ்ந்த தூக்கத்தை இரவில் பெறவும் உதவுகிறது. மெல்லிய இசை நரம்புகளை நெகிழ்வடையச் செய்து உடலுக்கு உற்சாகம் அளிக்கிறது.
இது மட்டுமல்லாமல் மூளை நரம்புகள் மிகச்சிறப்பாக செயல்படவும் உதவுகிறது. உங்கள் குழந்தைகளை ஏதாவது ஒரு இசைப்பயிற்சிக்கு தயார்படுத்துங்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

கடல் பாசி சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வுத் தகவல்

கடல் பாசி அல்லது கடல் பூண்டுகளை பாலில் கலந்து குடிப்பதன் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆரோக்கியமான முறையில் உடல் மெலிவடைய இது ஓர் நல்ல முறையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சொக்கலேட் கலந்த பாலில் இதைக் கலந்து குடிப்பதன் மூலம் பசியைக் அடக்க முடியும்.
காலையில் இதை அருந்தும் பழக்கம் உள்ள ஆண், பெண் அகிய இரு பாலாருள் மூன்றில் ஒருவர் பகல் நேரம் ஆகின்ற போது, ஏனையவர்களை விட பசி உணர்வு குறைந்தவர்களாகவே காணப்பட்டனர்.
உடல்பருமன் தொடர்பான ஒ.பே.சி.டி என்ற மருத்துவ இதழில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இத்தகைய பானத்தை அருந்துவதன் மூலம் இடையில் நொருக்குத் தீனிகளும் தேவைப்படாது.
உடல் பருமனைக் குறைப்பதற்கு இவ்வாறான ஆரோக்கியமான வழிமுறைகள் பல உள்ளன. ஆனால் அவற்றை யாரும் பின்பற்றாமல் இருப்பது தான் பிரதான பிரச்சினை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளின் அறிவை வளர்க்க கூடிய ஓன்லைன் விளையாட்டுகள்


குழந்தைகளுக்கு மகிழ்ச்சி தரும் விதமாகவும், அவர்களின் அறிவை வளர்க்கும் விதமாகவும் ஒரு தளம் உள்ளது.
படம் வரைவதில் பல குழந்தைகளுக்கு விருப்பம் இருக்கும். விளையாட்டு விளையாடுவதில் பல குழந்தைகளுக்கு விருப்பம் இருக்கும்.
புதிதாக அறிவியல் ரீதியில் ஏதாவது செய்ய வேண்டும் என்று சில குழந்தைகளுக்கு விருப்பம் இருக்கும். இப்படி அனைத்து தரப்பு குழந்தைகளும் ஒரே இடத்தில் தங்களின் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள ஒரு தளம் உள்ளது.
இத்தளத்திற்கு சென்று நாம் Coloring Page என்பதில் தொடங்கி Games, Printables, Crafts, Videos எனப் பல பகுதிகளை கொண்டுள்ளது. Coloring Page என்பதை சொடுக்கி படத்திற்கு வண்ணம் தீட்டலாம்.
Games என்பதை சொடுக்கி எளிமையான குழந்தைகளின் அறிவை வளர்க்கக்கூடிய விளையாட்டை விளையாடலாம். Printables என்பதை சொடுக்கி விரும்பிய படங்களை பிரிண்ட் செய்யலாம்.
Crafts என்பதை சொடுக்கி பலதரப்பட்ட கலைகளையும் எளிய தொழில்நுட்ப விபரங்களையும், அறிவியல் ரீதியான பல அறிய தகவல்களையும், பொம்மைகள் பேப்பரில் உருவாக்கக்கூடிய அழகான டிசைன்கள் என அனைத்தும் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
அடுத்து இருக்கும் Videos என்பதை சொடுக்கி குழந்தைகள் அதிகமாக விரும்பும் அனிமேசன் வீடியோக்களை பார்க்கலாம்.

மோதிர விரல் நீளமாக இருக்கும் ஆண்களையே பெண்கள் விரும்புகிறார்கள்: ஆய்வுத் தகவல்


ஆண்களுக்கு ஆள்காட்டி விரலைக் காட்டிலும் மோதிர விரல் நீளமாக இருக்கிறதா? இப்படி நீளமான மோதிர விரல் உள்ள ஆண்கள் அதிக வசீகரத்தை பெற்ற நபர்களாக உள்ளனர்.
மோதிர விரல் நீளமான ஆண்களே கவர்ச்சியானவர்கள். அவர்கள் தான் எங்களது நீண்ட கால வாழ்க்கை துணையாக வர வேண்டும் என பெண்கள் கூறுகிறார்கள்.
இந்த புதிய ஆய்வினை ஜெனிவா பல்கலைகழக ஆய்வாளர்கள் மேற்கொண்டனர். ஆள்காட்டி விரலுக்கும், மோதிர விரலுக்கும் உள்ள விகிதம் பாலின ஹோர்மோனுடன் தொடர்புடையதாக உள்ளது.
ஆள்காட்டி விரலை விட மோதிர விரல் நீளமாக இருக்கும் ஆண்களை பார்க்கும் போது, பெண்களுக்கு ஹோர்மோன் அதிக அளவில் தூண்டப்படுகிறது. இதனால் மோதிர விரல் நீளமாக உடைய ஆண்கள் பெண்களுக்கு கூடுதல் அழகாக தெரிகிறார்கள்.
இடது கையை விட வலது கையில் மோதிர விரல் நீளமாக இருக்கும் பட்சத்தில் பெண்களை அது வெகுவாக கவர்கிறது என ஆய்வுத் தலைவர் டொக்டர் காமிலே பெர்டன்சி தெரிவித்தார்.

தண்ணீரில் கைத்தொலைபேசி விழுந்தால்


நாம் அடிக்கடி செய்திடும் ஒரு காரியம் நம் கைத்தொலைபேசியை தண்ணீரில் போடுவது. குளியலறைகளுக்கும் எடுத்துச் செல்லும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறோம்.
அவ்வாறு விழுந்த பின் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள்:
1.முதலாவதாக போனில் எதனை எல்லாம் பிரித்து எடுத்து வைக்க முடியுமோ அவற்றை எல்லாம் பிரித்து எடுத்திடவும். கைத்தொலைபேசி கவர், பற்றரி கவர், பற்றரி, சிம் கார்ட், மெமரி கார்ட் ஆகியவை இதில் அடங்கும்.
2. அடுத்து கைத்தொலைபேசியில் எங்கெல்லாம் தண்ணீர் இருக்கும் என்று எண்ணுகிறீர்களோ அங்கு சிறிய மெல்லிய துணி, அல்லது டிஷ்யூ பேப்பர் கொண்டு சுத்தம் செய்து நீரை உறிஞ்சி எடுக்கவும். முழுவதுமாக உலர செய்திடவும்.
3. ஹேர் ட்ரையர் ஒன்று இருந்தால் அதனை எடுத்து கைத்தொலைபேசியை மீதாகப் பயன்படுத்தி ஈரத்தை உலர்த்தவும். குறிப்பாக பற்றரி வைத்திடும் இடத்தில் உள்ள ஈரத்தை முழுமையாக நீக்கவும்.
இவ்வாறு உலர வைக்கையில் ஹேர் ட்ரையரை கைத்தொலைபேசிக்கு மிக அருகே கொண்டு செல்லக் கூடாது. அது கைத்தொலைபேசியின் சில பகுதிகளைப் பாதிக்கலாம். எனவே சற்று தள்ளி வைத்து 20 முதல் 30 நிமிடம் வரை இவ்வாறு உலர வைக்கும் வேலையை மேற்கொள்ளவும்.
இந்த வேலையை மேற்கொள்கையில் கைத்தொலைபேசியை வெவ்வேறு நிலையில் வைத்து உலர வைக்கவும். இதனால் வெவ்வேறு இடங்களில் ஒட்டியிருக்கும் ஈரம் வெளியேறி உலரும்.
இதே போல பற்றரி, சிம் கார்டு ஆகியவற்றில் உள்ள ஈரத்தையும் உலர வைக்கவும்.
நன்றாக உலர்ந்த பின்னர் காற்றோட்டமான இடத்தில் வெகுநேரம் வைத்த பின்னர் பற்றரி, சிம் ஆகியவற்றைப் பொருத்தி இயக்கவும். அப்போதும் சரியாக இயங்கவில்லை எனில் இன்னும் சில மணி நேரம் காத்திருந்து ஈரம் தானாக உலரும் வரைப் பொறுத்திருக்கவும்.
அதன் பின்னரும் இயங்கவில்லை எனில் கைத்தொலைபேசியை சரி செய்திடும் பணியாளரிடம் சென்று நீரில் விழுந்ததை மறைக்காமல் கூறி நீங்கள் மேற்கொண்ட செயல்களையும் கூறி சரி செய்திடச் சொல்லவும்.

தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளுக்கு இதய நோய் பாதிப்பு அதிகம்


தினமும் அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளுக்கு இதய நோய் வர மிக அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவ ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை அனைவரது வீட்டிலும் தவறாமல் இடம் பெறும் சாதனம் தொலைக்காட்சி தான். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் பேசி, வி‌ளையாடுவதை விட தொலைக்காட்சி முன் அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.
ஓர் இடத்தில் அமராமல் ஓடி ஆடும் குழந்தைகளுக்கு உணவு கொடுக்க சிரமப்படும் தாய்மார்களோ, குழந்தைகயை ஓர் இடத்தில் அமர வைக்க தொலைக்காட்சியில் ஏதாவது கார்டூன் சேனலை போட்டு விட்டு உணவு கொடுக்கின்றனர்.
இதன் விளைவு இன்றைய இளம் தலைமுறையினர் விடிந்தது முதல் இரவு தூங்கும் வரை தொலைக்காட்சி பார்ப்பதையே பிரதான பொழுது போக்காக கொண்டுள்ளனர். இவ்வாறு அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்த ஆய்வில் இறங்கியது சிட்னி பல்கலைக்கழக ஆராய்ச்சி குழு.
3-6 வயதிலான சுமார் 1500 குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவு பல அதிர்ச்சி தரும் ‌தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி சராசரியாக நாள் ஒன்றிற்கு 2 மணி நேரம் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகள், 40 நிமிடங்கள் வரை ஓடி, ஆடி விளையாடும் செயல்களில் ஈடுபட்ட போதிலும் அவர்களின் கண்களின் பின்புறம் உள்ள நரம்புகளை சுருக்கி விடுவதுடன் இதயம் உள்ளிட்ட பல முக்கிய உறுப்புக்களுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் நரம்புகளையும் சுருக்குகிறது.
இதனால் இதயம் உள்ளிட்ட பல உறுப்புகளுக்கான சீரான ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. இதுவே நாளடைவில் இதய நோய், ரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோயை ஏற்படுத்த மிக அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக எச்சரிக்கிறது.
அதேசமயம் நாள் ஒன்றிற்கு சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே தொலைக்காட்சி பார்த்து விட்டு அதிக நேரம் விளையாடும் குழந்தைகளின் ரத்த ஓட்டம், இரண்டு மணி நேரம் தொலைக்காட்சி பார்த்த குழந்தைகளின் ரத்த ஓட்டத்தை விட சிறப்பாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வியாழன், ஏப்ரல் 21, 2011

இரத்த அழுத்ததிற்கு மருந்தாகும் வெங்காயம்


இன்றைய காலகட்டத்தில் மக்களிடையே உடல் பருமன், சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்றவை அதிகளவில் காணப்படுகிறது.
இதுகுறித்த ஆய்வுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. அவுஸ்திரேலியாவின் சதர்ன் குவீன்ஸ்லேண்ட் பல்கலைக்கழகத்தின் உயிர் மருத்துவத்துறை விஞ்ஞானிகள் சமீபத்தில் இதுதொடர்பாக தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
பெரிய வெங்காயத்தில் இருந்து எடுக்கப்பட்ட சத்துக்களை எலிகளுக்கு செலுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இது வெற்றிகரமாக நடந்ததைத் தொடர்ந்து மனிதர்களிடமும் அடுத்தகட்ட சோதனை நடத்தப்பட்டது. அதிலும் வெற்றி கிடைத்தது.
இந்த ஆய்வு பற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுவதாவது: உடலில் தேவையற்ற கொழுப்புகளை குறைத்து பருமனை கட்டுப்படுத்துவதிலும், சர்க்கரை நோய் பாதிப்புகளை குறைப்பதிலும், ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதிலும் பெரிய வெங்காயம் சிறப்பாக செயல்படுகிறது.
இது தவிர கல்லீரல் பாதிக்கப்படாமலும் காக்கிறது. இதுதொடர்பாக தீவிர ஆராய்ச்சி செய்து வருகிறோம். பெரிய வெங்காயத்தை பச்சையாகவோ, சமைத்தோ தினமும் சாப்பிடுவது மிகமிக நல்லது. பல்வேறு நோய்கள் வராமல் அது தடுக்கிறது.

2900 ஆண்டுகளுக்கு முன்பே நடைபெற்ற மூளை ஓபரேஷன்


திபெத்தில் 1998ம் ஆண்டு ஒரு வித்தியாசமான மண்டை ஓடு கிடைத்துள்ளதாகவும், அதை சோதனை செய்ததில் அந்த மண்டை ஓட்டை பிளந்து ஓபரேஷன் செய்ததற்கான அடையாளங்கள் இருந்துள்ளதாகவும் தெரிகிறது.
மண்டை ஓட்டை பிளந்து ஓபரேஷன் செய்வது என்பது சமீபத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவ முறையாக கருதப்படுகிறது.
ஆனால் அந்த மண்டை ஓட்டை ஆராய்ந்த போது அது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தையது என்று தெரியவந்தது. அதாவது அந்த காலத்திலேயே ஓபரேஷன் நடந்துள்ளது.
இப்போது திபெத்தில் 2900 ஆண்டுகளுக்கு முன்பே மூளை ஓபரேஷன் நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்து உள்ளன. பழங்கால புத்தகம் ஒன்றை ஆய்வு செய்த போது இந்த தகவல் கிடைத்து உள்ளது.
திபெத்தில் உள்ள லசா பல்கலைக்கழக பேராசிரியர் கர்மா டிரின்லி இந்த தகவலை கண்டறிந்து உள்ளார். அப்போது மூளை ஓபரேஷன் நடந்ததை இந்தியாவில் இருந்து தசோக்யெல் என்ற டொக்டர் பார்வையிட வந்திருந்ததாகவும் அதில் குறிப்புகள் உள்ளன.

மே 18 வரை ஐ.பி.எல்.லில் விளையாடலாம்: சிறிலங்க வாரியம்

மே 5ஆம் தேதிக்குள் சிறிலங்க கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் நாடு திரும்பிட வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்த சிறிலங்க கி்ரிக்கெட் வாரியம், அந்த நிபந்தனையை 13 நாட்களுக்குத் தளர்த்தியுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த சமரசம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் விளைவாகவே ஏற்கனவே விதித்த நிபந்தனையை சிறிலங்க கிரிக்கெட் வாரியம் தளர்த்தியுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

மே 18ஆம் தேதி வரை ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடும் சிறிலங்க ஆட்டக்காரர்கள், அதற்கு மறுநாள் மும்பையில் இருந்து இங்கிலாந்திற்குப் புறம்பட்டுச் செல்வார்கள். அங்கு செல்லும் சிறிலங்க கிரிக்கெட் அணியுடன் இணைந்து, இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிகளில் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல இடங்களில் மழை: வெப்பம் தணிந்தது


சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று திடீரென மழை பெய்ததால் வெப்பத்தின் அளவு குறைந்தது.
நாளையும் மழை பெய்யலாம் என வானிலை ஆய்வுமையத்தின் தகவல் தெரிவிக்கிறது.
இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கி தமிழகத்திலும், வட கர்நாடகாவின் சில பகுதிகளிலும் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக வெயிலின் உக்கிரம் கடுமையாக இருந்தநிலையில் சென்னையின் பல்வேறு இடங்களில் நண்பகலில் திடீரென பெய்த மழை வெப்பத்தின் அளவை தணித்தது.
தமிழகத்தின் உள்பகுதியில் மழையோ, இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்து.
நேற்றும் சில பகுதிகளில் மழை பெய்தது. ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் அதிகபட்சமாக 7 செமீ மழை பதிவானது.

புதன், ஏப்ரல் 20, 2011

தேர்தலில் அதிபர் வெற்றி நைஜீரியாவில் கலவரம்; 360 பேர் காயம் 15 ஆயிரம் பேர் வெளியேறினர்

தேர்தலில் அதிபர் வெற்றி 
 நைஜீரியாவில் கலவரம்; 360 பேர் காயம்
 
 15 ஆயிரம் பேர் வெளியேறினர்


ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் அதிபர் தேர்தல் நடந்தது. அதில், அதிபர் குட்லக் ஜோனாதன் 57 சதவீதம் வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து அவர் மீண்டும் ஆட்சி அமைக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் சர்வாதிகாரி முகமது புகார் 31 சத வீதம் வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.   வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளி வரத் தொடங்கியது முதல் அதிபர் ஜோனாதனின் ஆதரவாளர்கள் பல இடங்களில் களியாட்டங்கள் மற்றும் கொணட்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
 
இது புகாரின் ஆதரவாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக கூறி ஆங்காங்கே கலவரத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து குதுனா, கத்சினா, ஷம்பாரா மாகாணங்களில் வன்முறை சம்பவங்களும் அதை தொடர்ந்து கலவரமும் ஏற்பட்டது.
 
பின்னர் இக்கலவரம் 14 மாகாணங்களுக்கும் பரவியது. அக்கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர். ஆனால் அதுபற்றி தகவல் வெளியாகவில்லை. 360 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கலவரத்தில் பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் தென்குதுனா மாகாணத்தை சேர்ந்தவர்கள். இத்தகவலை செஞ்சிலுவை சங்க பேரிடர் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் உமர் அப்துல் மரிகா தெரிவித்துள்ளார்.  
 
இதற்கிடையே கலவரத்தில் ஈடுபடும் மக்களை அமைதி வழியில் திரும்பும்படி அதிபர் குட்லக் ஜோனா தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேபோன்று தேர்தலில் தோல்வி அடைந்த முகமது புகாரியும் நாட்டு மக்கள் அமைதி காக்கும்படி கோரியுள்ளார்.




மீனவர்கள் படுகொலை: இலங்கை அரசுக்கு இந்தியா கண்டனம்

மீனவர்கள் படுகொலை:
 
 இலங்கை அரசுக்கு
 
 இந்தியா கண்டனம்


ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் கடலில் மீன் பிடிக்க சென்ற போது துப்பாக்கியால் சுடப்பட்டும், வெட்டியும் கொலை செய்யப்பட்டனர். உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா இலங்கையை தோற்கடித்ததால் சிங்கள கடற்படை அவர்களை சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
இலங்கை அரசின் இந்த செயலுக்கு மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமாராவ் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
சில மாதங்களுக்கு முன்பு நான் கொழும்பு சென்று தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது குறித்து அதிபர் ராஜ பக்சேயுடன் பேச்சு நடத்தினேன். அப்போது தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று கூறினேன். மீன்பிடி உரிமை குறித்து இந்தியா-இலங்கை இடையே கூட்டுக்குழு அமைக்கவும் வற்புறுத்தினேன்.
 
மீனவர்கள் பிரச்சினைக்கு வன்முறையில் தீர்வுகாண முடியாது. பேச்சு வார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: பரபரப்பான ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி


ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பையில் நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-புனே வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த புனே அணி 17.2 ஓவரில் 118 ரன்களுக்கு் சுருண்டது. அதிகபட்சமாக உத்தப்பா 37 பந்தில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 45 ரன்கள் எடுத்தார்.
 
அடுத்து களம் இறங்கிய மும்பை அணி புனே அணியின் பந்து வீச்சுக்கு தடுமாறியது. கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்டன. சைமண்ட்ஸ், ரோகித் சர்மா களத்தில் நின்றனர். முதல் 3 பந்துகளில் முறையே தலா 1 ரன்கள் எடுக்கப்பட்டன. 4-வது பந்தில் ரன் இல்லை. 5-வது பந்தில் 1 ரன் எடுக்கப்பட்டது. இதனால் கடைசி பந்தில் வெற்றிக்கு 1 ரன் தேவைப்பட்டது. ரோகித் சர்மா சிக்சர் அடித்து பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மும்பை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 20 ரன்கள் (18 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்), சைமண்ட்ஸ் 16 ரன்கள் (15 பந்து, 2 பவுண்டரி) எடுத்தனர். ராயுடு 37 ரன்கள், தெண்டுல்கர் 35 ரன்கள் எடுத்தனர்.

மழையால் தோற்றோம்: தோனி

 


சென்னை அணியின் வெற்றியை மழை பறித்துவிட்டது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
கொச்சி- சென்னை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் திங்கள்கிழமை கொச்சியில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தின்போது சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழை காரணமாக ஆட்டம் 17 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் கொச்சி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதுகுறித்து தோனி கூறியது: மழை குறுக்கிட்டதால் ஆட்டத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக்கூடிய கடைசி 3 ஓவர்கள் விளையாட முடியாமல் போனது. அந்த 3 ஓவர்களை விளையாடியிருந்தால் மிகப்பெரிய ஸ்கோரை எடுத்திருக்க முடியும். இக்கட்டான நேரத்தில் மழை குறுக்கிட்டது எங்களுக்கு பாதகமாக முடிந்துவிட்டது. கொச்சியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டு எங்களை (சென்னை அணி) கட்டுப்படுத்திவிட்டனர். மெக்கல்லம் சிறப்பாக விளையாடினார் என்றார்.
சென்னை அணியின் பீல்டிங் குறித்து கேட்டபோது, எங்களின் பீல்டிங் நன்றாக இருந்தது. ஆனால் போதுமான அளவில் ரன் குவிக்கத் தவறிவிட்டோம் என்றார்.
கொச்சி அணியின் கேப்டன் ஜெயவர்த்தனா கூறுகையில், இருபது ஓவர் போட்டியைப் பொறுத்தவரையில் சிறிதளவு அதிர்ஷ்டமும் வேண்டும். மெக்கல்லம்-பார்திவ் பட்டேல் ஆகியோரின் பார்ட்னர்ஷிப் வெற்றிக்கு உதவியது என்றார்.

சச்சின் சாதனையை ஒரு விருதால் அளவிட முடியாது


சச்சினின் சாதனையை ஒரு விருதால் அளவிட முடியாது. விருதுகளை விட சச்சின் மேன்மையானவர் என்று இந்திய டென்னிஸ் நட்சத்திரம் மகேஷ் பூபதி தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள பலரும் சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கூறி வரும் வேளையில், மகேஷ் பூபதி இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தனது காதல் மனைவி லாரா தத்தாவுடன் கொல்கத்தாவிற்கு செவ்வாய்க்கிழமை வந்த மகேஷ் பூபதி இதுகுறித்து மேலும் கூறியது:
சச்சின் விருதுகளை விட மேன்மையான மனிதர். விருதுகள் வரும், போகும்; அது இரண்டாவது பட்சம்தான். இந்திய கிரிக்கெட்டுக்கு சச்சின் வழங்கியுள்ள பங்களிப்பை பிரதிபலிப்பதாக அது இருக்காது என்றார்.
டென்னிஸ் குறித்துப் பேசிய பூபதி, 36 வயதானாலும், இப்போதும் வெற்றிபெற வேண்டும் என்ற தாகம் உள்ளது. இப்போதும் போட்டிகளை ரசித்து விளையாடுகிறோம். மே மாதம் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் பயஸýடன் இணைந்து பங்கேற்கவுள்ளேன். அதற்காக இப்போது சிறப்பாகத் தயாராகி வருகிறோம் என்றார்.
அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் குறித்து கேட்டபோது, முதலில் எங்களை நாங்கள் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அதன்பிறகே அதைப் பற்றி சிந்திக்க முடியும் என்றார்.
சோம்தேவ், சானியா ஆகியோரைப் பாராட்டிய பூபதி, சோம்தேவ் இளம் வீரர். அவர் இப்போதே 71-வது இடத்துக்கு வந்துவிட்டார். திறமையான வீரர். அவர் அவருடைய வழியில் தொடர்ந்து சிறப்பாக ஆட வேண்டும். சானியா ஒற்றையர் பிரிவில் சிறப்பாக ஆடி வருகிறார். அவர் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஆடினால் தரவரிசையில் முன்னேற முடியும் என்றார்.

செவ்வாய், ஏப்ரல் 05, 2011

ராஜபக்ஷேவுடன் காங்., வேட்பாளர் போஸ்டர் ஒட்டப்பட்ட கார் பறிமுதல்

ராமேஸ்வரம் : இலங்கை அதிபர் ராஜபக்ஷேயுடன், ராமநாதபுரம் காங்., வேட்பாளர் ஹசன் அலி இருப்பது போன்று, போஸ்டர் ஒட்டப்பட்ட காரை, போலீசார் பறிமுதல் செய்தனர். நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் டொமினிக் ரவி, இளங்கோ மற்றும் ஜெரோன்குமார் ஆகியோர், நேற்று, ராமேஸ்வரம் பகுதியில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவஹிருல்லாவை ஆதரித்து, பாம்பன் பகுதியில் பிரசாரம் செய்தனர். இவர்கள் சென்ற காரில், காங்., வேட்பாளர் ஹசன் அலி இலங்கை அதிபர் ராஜபக்ஷேவிடம் இருந்து கேடயம் வாங்குவது போன்ற படத்துடன், "கொலைகார கை சின்னத்திற்கு வாக்களிக் காதீர்' என்ற வாசகத்துடன் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து வேட்பாளர் ஹசன் அலி, தன்னை பற்றி நாம் தமிழர் கட்சியினர் அவதூறு பிரசாரம் செய்வதாக போலீசில் புகார் செய்தார். பிரசாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட இண்டிகா காரை, பாம்பன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

ம.ம.க.விற்கு ஆதரவாக பெண்கள் பிரசாரம் !



அல்லாஹ்வின் பேரருளால் கடற்கரையாக இருந்தாலும் , கமிசனர் அலுவலகமாக இருந்தாலும், மருத்துவமனையாக இருந்தாலும் களமிறங்கி தஃவா செய்யும் பெண்கள் உள்ள அமைப்பான இ.த.ஜ.வின் மகளிர் அழைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மஸுதா ஆலிமா கடந்த வாரம் திருவல்லிக்கேணி மர்கசில் 'இறை  வழியில்  செலவு'  எனும்  தலைப்பில்  உரை  நிகழ்த்தினார்.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். 

இதில் இறுதியாக பேசிய போது இந்த தொகுதியில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளருக்கு நாமெலாம் வாக்கு சேகரிக்க வேண்டும் ! நம் சொந்த பந்தம் , அக்கம் பக்கம் வசிப்போர் அனைவருக்கும் எடுத்து சொல்லி தமிம் அன்சாரி அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் ! என கூற அனைத்துப் பெண்களும் அமோதிதனர்.  மேலும் 2300 ருபாய் நன்கொடையும் அளித்தனர்  .  
Photobucket