அஸ்ஸலாமு அழைக்கும்[வரஹ்] எல்லாம் புகழும் இறைவனுக்கே!!!.. டுடே எக்ஸ்பிரஸ் நியூஸ் இணையதளம் வருகைக்கு நன்றி !!!....

ஞாயிறு, அக்டோபர் 30, 2011

20 ஓவர் கிரிக்கெட்: இந்தியாவின் தொடர் வெற்றி தொடருமா?


கொல்கத்தா, அக்.28   இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 20 ஓவர் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில்  நாளை (அக்.29) நடக்கிறது.  இங்கிலாந்து அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 20 ஓவர் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற முனைப்புடன் உள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 5 ஒருநாள் போட்டிகளிலும் இந்தியா தொடர்ந்து வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 20 ஓவர் போட்டி நாளை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்தபோது டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டி, 20 ஓவர் போட்டி என அனைத்து போட்டியிலும் இந்தியா தோல்வி அடைந்தது. ஒரு போட்டியில்கூட வெற்றி பெற முடியவில்லை. அதுபோல் இங்கிலாந்து அணியை பழிதீர்க்கும் வகையில் தற்போது இந்தியா அனைத்து ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இங்கிலாந்து அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாளை நடைபெறும் 20 ஓவர் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற முனைப்புடன் உள்ளது. இந்திய அணியில் காம்பீர் விளையாடவில்லை. அவருக்கு பதில் யூசுப் பதான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மூத்த வீரர்கள் இல்லாத நிலையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி வலுவாக உள்ளது. 5 ஒருநாள் போட்டியிலும் இந்திய வீரர்களின் ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருந்தது. இதன் மூலம் இங்கிலாந்தில் ஏற்பட்ட ஏமாற்றத்தையும், அவமானத்தையும் சரிசெய்து அணியின் கவுரவத்தை நிலைநிறுத்தி விட்டனர்.
20 ஓவர் போட்டி நாளை இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. போட்டியை நியோ ஸ்போர்ட்ஸ், தூர்தர்ஷன் சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.
20 ஓவர் போட்டியிலும் இந்திய அணியின் வெற்றி தொடரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Photobucket