அஸ்ஸலாமு அழைக்கும்[வரஹ்] எல்லாம் புகழும் இறைவனுக்கே!!!.. டுடே எக்ஸ்பிரஸ் நியூஸ் இணையதளம் வருகைக்கு நன்றி !!!....

செவ்வாய், ஜனவரி 03, 2012

வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு குளிர் காற்று வீசும் லேசான மழை பெய்யும்

சென்னை : வளிமண்டல மேல் அடுக்கில் காற்றில் ஈரப்பதம் இருப்பதால், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ‘தானே’ புயல் தமிழகத்தை கடந்து அரபிக் கடலுக்கு சென்றது. அங்கு, அது வலுவிழந்து குறைந்த காற்றழுத்தமாக மாறியது. இந்நிலையில், வங்கக் கடலில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சத் தொடங்கியது.

இதனால், தமிழகத்தில் நேற்று திடீரென சில இடங்களில் மழை பெய்தது. அதில் மாமல்லபுரம், தாம்பரம், பூந்தமல்லி, செம்பரம்பாக்கம் ஆகிய இடங்களில் 10 மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில், வங்கக் கடலில் வளி மண்டல மேல் அடுக்கில் காற்றின் ஈரப்பதம் உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் குளிர் காற்று வீசும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். மற்ற இடங்களில் வறண்ட வானிலை காணப்படும்.

கருத்துகள் இல்லை:

Photobucket