சார்க் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் இன்று மலாத்தீவு செல்கிறார்.
17வது சார்க் உச்சி மாநாடு நாளை முதல் 2 நாட்கள் மாலத்தீவில் நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்ள பிரதமர் மன்மோகன் சிங் இன்று மாலத்தீவிற்கு புறப்பட்டு செல்கிறார்.
மாலத்தீவில் பாகிஸ்தான் பிரதமர் கிலானியுடன் இருதரப்பு பிரச்சனைகள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.
மேலும், மாநாட்டில் ஆசிய மண்டலத்தில் ஏற்படும் இயற்கைச் சீற்றங்களை சமாளிப்பது, விவசாயத்துறையில் சார்க் விதைகள் வங்கி துவங்குவது மற்றும் ஆசிய நாடுகளுடனான வர்த்தக தொடர்புகளை மேம்படுத்துவது குறித்து முக்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக