அஸ்ஸலாமு அழைக்கும்[வரஹ்] எல்லாம் புகழும் இறைவனுக்கே!!!.. டுடே எக்ஸ்பிரஸ் நியூஸ் இணையதளம் வருகைக்கு நன்றி !!!....

புதன், நவம்பர் 09, 2011

டீசல், கேஸ் விலையை உயர்த்தினால் ஆதரவு வாபஸ்: மமதா

புதுதில்லி, நவ.9: டீசல், கேஸ் விலையை உயர்த்தினால் மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெறுவோம் என மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மமதா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டீசல், கேஸ் விலையை உயர்த்த அரசு திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது. அப்படி விலை உயர்த்தப்பட்டால் நாங்கள் மீண்டும் யோசிக்க வேண்டியிருக்கும். அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற நாங்கள் விரும்பவில்லை. எனினும் அரசியலில் சில நெருக்கடிகளும் உள்ளன. நாங்கள் மக்களுக்கு பதில் கூறியாக வேண்டும் என மமதா கூறினார்.
முன்னதாக பெட்ரோல் விலைஉயர்வை திரும்பப் பெறாவிட்டால் மத்திய அரசுக்கு ஆதரவை வாபஸ் பெறுவோம் என எச்சரித்திருந்தார். எனினும் விலை உயர்வை திரும்பப் பெற பிரதமர் மன்மோகன் சிங் மறுத்துவிட்டார். இந்த நிலையில் டீசல், கேஸ் விலை உயர்த்தப்பட்டால் ஆதரவை வாபஸ் பெறுவோம் என புதிதாக எச்சரிக்கை விடுத்துள்ளார் மமதா பானர்ஜி.

கருத்துகள் இல்லை:

Photobucket