அஸ்ஸலாமு அழைக்கும்[வரஹ்] எல்லாம் புகழும் இறைவனுக்கே!!!.. டுடே எக்ஸ்பிரஸ் நியூஸ் இணையதளம் வருகைக்கு நன்றி !!!....

வியாழன், ஏப்ரல் 21, 2011

மே 18 வரை ஐ.பி.எல்.லில் விளையாடலாம்: சிறிலங்க வாரியம்

மே 5ஆம் தேதிக்குள் சிறிலங்க கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் நாடு திரும்பிட வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்த சிறிலங்க கி்ரிக்கெட் வாரியம், அந்த நிபந்தனையை 13 நாட்களுக்குத் தளர்த்தியுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த சமரசம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் விளைவாகவே ஏற்கனவே விதித்த நிபந்தனையை சிறிலங்க கிரிக்கெட் வாரியம் தளர்த்தியுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

மே 18ஆம் தேதி வரை ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடும் சிறிலங்க ஆட்டக்காரர்கள், அதற்கு மறுநாள் மும்பையில் இருந்து இங்கிலாந்திற்குப் புறம்பட்டுச் செல்வார்கள். அங்கு செல்லும் சிறிலங்க கிரிக்கெட் அணியுடன் இணைந்து, இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிகளில் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

Photobucket