அஸ்ஸலாமு அழைக்கும்[வரஹ்] எல்லாம் புகழும் இறைவனுக்கே!!!.. டுடே எக்ஸ்பிரஸ் நியூஸ் இணையதளம் வருகைக்கு நன்றி !!!....

புதன், ஏப்ரல் 20, 2011

மழையால் தோற்றோம்: தோனி

 


சென்னை அணியின் வெற்றியை மழை பறித்துவிட்டது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
கொச்சி- சென்னை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் திங்கள்கிழமை கொச்சியில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தின்போது சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழை காரணமாக ஆட்டம் 17 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் கொச்சி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதுகுறித்து தோனி கூறியது: மழை குறுக்கிட்டதால் ஆட்டத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக்கூடிய கடைசி 3 ஓவர்கள் விளையாட முடியாமல் போனது. அந்த 3 ஓவர்களை விளையாடியிருந்தால் மிகப்பெரிய ஸ்கோரை எடுத்திருக்க முடியும். இக்கட்டான நேரத்தில் மழை குறுக்கிட்டது எங்களுக்கு பாதகமாக முடிந்துவிட்டது. கொச்சியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டு எங்களை (சென்னை அணி) கட்டுப்படுத்திவிட்டனர். மெக்கல்லம் சிறப்பாக விளையாடினார் என்றார்.
சென்னை அணியின் பீல்டிங் குறித்து கேட்டபோது, எங்களின் பீல்டிங் நன்றாக இருந்தது. ஆனால் போதுமான அளவில் ரன் குவிக்கத் தவறிவிட்டோம் என்றார்.
கொச்சி அணியின் கேப்டன் ஜெயவர்த்தனா கூறுகையில், இருபது ஓவர் போட்டியைப் பொறுத்தவரையில் சிறிதளவு அதிர்ஷ்டமும் வேண்டும். மெக்கல்லம்-பார்திவ் பட்டேல் ஆகியோரின் பார்ட்னர்ஷிப் வெற்றிக்கு உதவியது என்றார்.

கருத்துகள் இல்லை:

Photobucket