புதுதில்லி, ஏப்.5: 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையை மீண்டும் வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.
அமெரிக்க மக்களின் சார்பாகவும், அமெரிக்க அதிபர் ஒபாமா சார்பாகவும் 28 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையைக் கொண்டுவந்துள்ள இந்திய அணிக்கு மனப்பூர்வமாக வாழ்த்து தெரிவிக்கிறோம் என தில்லியில் இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவை சந்தித்த பின் அமெரிக்கத் தூதர் திமோதி ரோமர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்தியாவின் வெற்றி மிகுந்த சிறப்பு வாய்ந்தது என பாராட்டு தெரிவித்த ரோமர், இந்திய அணியின் கேப்டன் தோனியையும் பாராட்டினார்.
தவறில்லாமல், சிறந்த முடிவுகளை எடுப்பவர் தோனி என ரோமர் குறிப்பிட்டார்.
உலகக் கோப்பையை இந்தியா வென்ற சனிக்கிழமை இரவு தில்லியில் இந்தியா கேட் பகுதியில் மக்கள் குழுமியிருந்த பகுதிக்கு வரத் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் பாதுகாப்பு ஆலோசகர்கள் அதைத் தடுத்துவிட்டதாகவும் ரோமர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக