செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்பார்கள் கிராமபுறங்களில். எச்சில் கையால் காக்காய் கூட ஓட்டாத வடிவேலு, தன்னையறியாமல் மேற்படி பழமொழிக்கு உயிரூட்டியிருக்கிறார். |
பகையாக இருந்தாலும் இவரால் பணமழை பொழிந்திருக்கிறது ஒருவருக்கு அந்த அதிர்ஷ்டசாலி சிங்கமுத்துவேதான். இந்த தேர்தலில் சிங்கத்தின் வசூல் எவ்வளவு என்கிறீர்கள்? அது அரை கோடி இருக்கும் என்கிறார்கள் கட்சிக்காரர்கள் அம்மா மட்டுமே முப்பது கொடுத்தாராம். உள்ளூர் வசூல் இருபது இருக்கும் என்று மனக்கணக்கு போடுகிறது அரசியல் வட்டாரம். அடிகொடுத்த கட்டபுள்ளைக்கே இவ்வளவு சேதம்னா அடிவாங்குன எதிர்கட்சியினருக்கு என்று ஆச்சர்யம் காட்டலாம், தப்பில்லை. வடிவேலுவுக்கு தலைமை கொடுத்ததே பல பெட்டிகள் என்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் எங்க இடத்தில் கொஞ்ச அதிக நேரம் பிரச்சாரம் செய்தால் இத்தனை கோடி கூடுதலா தர்றேன் என்றார்களாம் சில வேட்பாளர்கள். மந்திரி வட்டாரத்தில் இன்னும் சலூகை கூடுதலாம். இப்படி நாடு முழுக்க சுற்றி பேசினாலும், வசூல் என்னவோ இன்னொரு பசுமை புரட்சி என்கிறார்கள் அதே கட்சிக்காரர்கள். சிங்கமுத்துவின் வசூல் எல் கணக்கு என்றால் வடிவேலுவின் வசூல் கணக்காம் மக்களின் மனக்கணக்கு என்ன என்பதுதான் இன்னும் புரியவே இல்லை யாருக்கும். |
சனி, ஏப்ரல் 23, 2011
வடிவேலு, சிங்கமுத்து வசூல் நிலவரம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக