அஸ்ஸலாமு அழைக்கும்[வரஹ்] எல்லாம் புகழும் இறைவனுக்கே!!!.. டுடே எக்ஸ்பிரஸ் நியூஸ் இணையதளம் வருகைக்கு நன்றி !!!....

புதன், ஏப்ரல் 20, 2011

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: பரபரப்பான ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி


ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பையில் நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-புனே வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த புனே அணி 17.2 ஓவரில் 118 ரன்களுக்கு் சுருண்டது. அதிகபட்சமாக உத்தப்பா 37 பந்தில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 45 ரன்கள் எடுத்தார்.
 
அடுத்து களம் இறங்கிய மும்பை அணி புனே அணியின் பந்து வீச்சுக்கு தடுமாறியது. கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்டன. சைமண்ட்ஸ், ரோகித் சர்மா களத்தில் நின்றனர். முதல் 3 பந்துகளில் முறையே தலா 1 ரன்கள் எடுக்கப்பட்டன. 4-வது பந்தில் ரன் இல்லை. 5-வது பந்தில் 1 ரன் எடுக்கப்பட்டது. இதனால் கடைசி பந்தில் வெற்றிக்கு 1 ரன் தேவைப்பட்டது. ரோகித் சர்மா சிக்சர் அடித்து பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மும்பை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 20 ரன்கள் (18 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்), சைமண்ட்ஸ் 16 ரன்கள் (15 பந்து, 2 பவுண்டரி) எடுத்தனர். ராயுடு 37 ரன்கள், தெண்டுல்கர் 35 ரன்கள் எடுத்தனர்.

கருத்துகள் இல்லை:

Photobucket